எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் கைது

எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் கைது

by Staff Writer 12-04-2022 | 12:37 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர், வத்தளை - ஹெந்தல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 71 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 30 லீட்டர் 750 மில்லி லீட்டர் பெட்ரோலுடன் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.