ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

8 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

by Staff Writer 11-04-2022 | 3:56 PM
Colombo (News 1st) யாழ். நெடுந்தீவில் ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர், படகில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. டிங்கி படகில் மிக சூட்சுமமாக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பூநகரி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 36 வயதுக்குட்பட்ட மூவரே  போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் ஊர்காவற்றுரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.