8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 10-04-2022 | 4:19 PM
Colombo (News 1st) எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது. அதனடிப்படையில், நுவரெலியா, கொழும்பு, பதுளை, களுத்தறை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் ஆகிய 8 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.