சதொச ஊடாக குறைந்த விலையில் நிவாரணப் பொதி விநியோகம்

சதொச ஊடாக குறைந்த விலையில் நிவாரணப் பொதி விநியோகம் 

by Bella Dalima 09-04-2022 | 3:10 PM
Colombo (News 1st) தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையை விட குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரணப் பொதி ஒன்றை சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய பொதி ஒன்று 1950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில், இந்த 5 வகை பொருட்களை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணப் பொதி நாளை (10) தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.