English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
09 Apr, 2022 | 4:12 pm
Colombo (News 1st) மூதாட்டி ஒருவரை கொலை செய்து அவரின் காதணியை திருடிச்சென்ற சம்பவம் தலவாக்கலை – வட்டகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (08) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
84 வயதான மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வாய், துணியால் கட்டப்பட்டுள்ளதுடன், கழுத்தும் துணியினால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து அவர் அணிந்திருந்த காதணியை சந்தேகநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
சடலம் நீதவான் விசாரணைகளுக்காக குறித்த இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
24 Jun, 2022 | 05:53 PM
11 Jun, 2022 | 03:45 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS