English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Apr, 2022 | 4:28 pm
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் விநியோகிப்பதற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசி, சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இவ்வார இறுதியில் 40,000 மெட்ரிக் தொன் அரசி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்திய கடன் வசதியின் கீழ் குறித்த அரிசி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகா பெரேரா தெரிவித்தார்.
பொன்னி சம்பா, பொன்னி நாட்டரிசி மற்றும் வௌ்ளை பச்சையரிசி என்பன இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், ஒரு கிலோ பொன்னி சம்பாவை 130 ரூபாவிற்கும் ஏனைய அரிசி வகைகளை 110 ரூபாவிற்கும் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்தது.
11 Oct, 2022 | 06:29 PM
30 Jun, 2022 | 04:28 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS