மக்கள் சக்தியினால் உலர் உணவுப்பொதிகள் விநியோகம்

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மக்கள் சக்தியினால் உலர் உணவுப்பொதிகள் விநியோகம்

by Staff Writer 08-04-2022 | 5:07 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மக்கள் பாரிய நெருக்கடியான பொருளாதார நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினர் இந்நாட்களில் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாதுள்ளது. பண்டிகைக் காலத்தில், இவ்வாறான குடும்பங்கள் மகிழ்ச்சியாக பண்டிகையைக் கொண்டாடும் நோக்கில், மக்கள் சக்தியினால் உலர் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் இந்த நடவடிக்கையை மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. பஸ்கள் மற்றும் ரயில்களில் உலர் உணவுப்பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. 25 மாவட்டங்களிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இன்று முதல் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படும்.    

ஏனைய செய்திகள்