மேலும் நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம் 

மேலும் நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம் 

by Bella Dalima 08-04-2022 | 7:14 PM
Colombo (News 1st) இலங்கையிலிருந்து அகதிகளாக மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து தலைமன்னார் சென்று, அங்கிருந்து படகு மூலம் நால்வரும் தமிழகத்திற்கு சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நால்வரிடமும் இந்திய கடலோர காவல் படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையினை அடுத்து, இதுவரை மூன்று குடும்பங்களை சேர்ந்த 20 பேர் கடல் மார்க்கமாக அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.