நிதி அமைச்சின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

நிதி அமைச்சின் புதிய செயலாளராக K.M. மஹிந்த சிறிவர்தன கடமைகளை பொறுப்பேற்றார்

by Staff Writer 08-04-2022 | 4:45 PM
Colombo (News 1st) நிதி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள K.M. மஹிந்த சிறிவர்தன இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கடமையாற்றிய அவர் பொருளியல் ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டானுக்கான பிரதி நிறைவேற்று பணிப்பாளராகவும் K.M. மஹிந்த சிறிவர்தன கடமையாற்றியுள்ளார். அத்துடன், நிதி அமைச்சின் அரச நிதிக் கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் அவர் செயற்பட்டுள்ளார். இதனிடையே, ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய தாம் தொடர்ந்தும் நிதி அமைச்சராக கடமையை தொடர்வதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்