ஜனாதிபதி இராஜினாமா செய்ய மாட்டார், மோதுவதற்கு நாம் தயார் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

by Staff Writer 07-04-2022 | 12:00 PM
Colombo (News 1st) ஜனாதிபதி இராஜினாமா செய்தால் மாத்திரமே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நிபந்தனையின் அடிப்படையில் கொண்டுவரக்கூடிய எந்தவொரு பிரேரணை குறித்தும் கலந்துரையாடுவதற்கு தாம் தயாரென அனுர குமார திசாநாயக்க இன்று(07) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அனுர குமார திசாநாயக்கவின் கருத்துக்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் வழங்கினார். ஜனாதிபதி இராஜினாமா செய்ய மாட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புவதுடன் உங்களுடைய குறுகிய நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுடன் மோதுவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.