சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை

சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை

by Staff Writer 06-04-2022 | 10:03 AM
Colombo (News 1st) ​மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைத்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனைய செய்திகள்