English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Apr, 2022 | 3:50 pm
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் சட்டவைத்திய அதிகாரிக்கும் பேராசிரியர் ராஜ் சோமதேவவிற்கும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணைக்கு இவர்கள் இருவரும் சமூகமளிக்காமையால், அவர்களுக்கு அழைப்பாணையை பிறப்பிக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு, மன்னார் நீதவான் A.S ஹிபதுல்லா முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக முடியும் என கடந்த தவணையின் போது அவர்கள் அறிவித்த போதும், அவர்கள் இன்று ஆஜராகவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி வழக்கின் முன்னேற்ற அறிக்கையை வவுனியா மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், எதிர்வரும் 26 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
15 Jun, 2022 | 05:44 PM
11 Jun, 2022 | 03:45 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS