மட்டக்களப்பு - கோட்டைமுனையில் விளையாட்டு கிராமம் திறந்து வைப்பு

by Staff Writer 04-04-2022 | 6:58 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கோட்டைமுனையில் விளையாட்டு கிராமமொன்று இன்று(04) திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் பகுதியின் புற்தரை மைதானம் இன்று(04) திறந்து வைக்கப்பட்டது. புலம்பெயர் அமைப்புகளின் நிதி உதவியின் கீழ் இந்த மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க, ரொமேஷ் களுவிதாரண உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன் பின்னர் கண்காட்சி கிரிக்கெட் போட்டியொன்றும் இடம்பெற்றது.