ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் விலக தீர்மானம் - துமிந்த திசாநாயக்க

by Staff Writer 04-04-2022 | 9:29 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று(04) பிற்பகல் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இராஜினாமா கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.