by Staff Writer 03-04-2022 | 2:37 PM
Colombo (News 1st) சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையுடன் தாம் இணங்கவில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மீதான தடைக்கு மேலே சென்று முறையான நடைமுறையொன்றை மேற்கொள்ள வேண்டும் என அவர் தமது ட்விட்டர் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, VPN ஊடாகவே தாமும் சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(02) நள்ளிரவு முதல் அனைத்து சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.