வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வௌியேறுவதாக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிப்பு 

by Bella Dalima 02-04-2022 | 4:48 PM
Colombo (News 1st) மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வௌியேறுவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தீர்மானத்தை இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிப்பதாக இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.