by Bella Dalima 02-04-2022 | 5:51 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கான ஆரம்ப வகுப்புகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த வகுப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை (04) ஆரம்பமாகவிருந்தன.
ஊரடங்கு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் ஶ்ரீ. சற்குணராசா அறிவித்துள்ளார்.