ஊரடங்கு காலத்தில் பொது இடங்களில் நடமாட முடியாது

ஊரடங்கு காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட முடியாது:  விசேட வர்த்தமானி வௌியீடு

by Bella Dalima 02-04-2022 | 10:13 PM
Colombo (News 1st) ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் பிரதான வீதிகளில், ரயில் தண்டவாளங்களில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில், கடற்கரைகளில் அல்லது பொது இடங்களில் நடமாட முடியாது என அறிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இன்று (02) மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (04) திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைவாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.