இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா 

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா 

by Bella Dalima 02-04-2022 | 3:22 PM
Colombo (News 1st) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட ரொஷான் ரணசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியிலிருந்தும் இராஜிநாமா செய்வதாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணமும் உர மானியமும் வழங்குமாறு வலியுறுத்தியே தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.