ரமழான் மாதம் ஆரம்பம்: பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

இன்றுடன் ரமழான் மாதம் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

by Bella Dalima 02-04-2022 | 7:15 PM
Colombo (News 1st) புனித ரமழான் மாதம் இன்றுடன் (02) ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நடைபெற்றது. இதன்போது, நாட்டின் சில பகுதிகளில் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்றுடன் ரமழான் மாதம் ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டது.