மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கைதான 21 பேருக்கு பிணை

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கைதான 21 பேர் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 01-04-2022 | 11:26 PM
Colombo (News 1st) நுகேகொடை - மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் தலா 100,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதான மேலும் 6 பேருக்கு ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார்.