நுவரெலியாவில் தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டம் 

நுவரெலியாவில் தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டம் 

by Staff Writer 01-04-2022 | 3:44 PM
Colombo (News 1st) டீசல் வழங்குமாறு கோரி நுவரெலியாவில் தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் போக்குவரத்திற்கு அனுமதிக்காது, தனியார் பஸ் சாரதிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.