ஏப்ரல்  7 ஆம் திகதி வடக்கின் பெருஞ்சமர் ஆரம்பம் 

ஏப்ரல்  7 ஆம் திகதி வடக்கின் பெருஞ்சமர் ஆரம்பம் 

by Staff Writer 01-04-2022 | 5:12 PM
Colombo (News 1st) வடக்கின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் புனித ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான  115 ஆவது கிரிக்கட் போட்டி எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான வீரர்கள் அறிமுக விழா யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நேற்று (31) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். மத்திய கல்லூரி அதிபர் S.K. எழில் வேந்தன், புனித ஜோன்ஸ் கல்லூரியின் அதிபர் V.S.P. துசிதரன், அனுசரணை வழங்கும் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் இரு அணிகளினதும் வீரர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 115 ஆவது வடக்கின் பெருஞ்சமர் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 7, 8, 9 ஆம் திகதிகளில் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா பெரும்தொற்று காரணமாக கடந்த வருடம் இப்போட்டிகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது.