by Bella Dalima 31-03-2022 | 8:40 PM
Colombo (News 1st): மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான - பெங்கிரிவத்தை வீதியில் இன்று பிற்பகல் முதல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.