மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுதலை 

by Staff Writer 31-03-2022 | 11:06 AM
Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்