மூன்று இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடலில் மீன் பிடித்த 3 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

by Bella Dalima 31-03-2022 | 3:49 PM
Colombo (News 1st) SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மீனவர்களின் படகு மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். காரைநகரை அண்மித்த கடற்பரப்பில் நேற்றிரவு இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை - ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மூன்று மீனவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.