மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள டெல் அவிவ் ( Tel Aviv ) நகரில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐவர் பலியாகியுள்ளனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.
மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலில் ஒரு வார காலத்தில் பதிவாகிய மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.