நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 29-03-2022 | 12:28 PM
Colombo (News 1st) கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்று(28) கைது செய்யப்பட்டனர். மீனவர்களின் படகொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.