கடதாசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை

கடதாசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை

by Staff Writer 28-03-2022 | 3:21 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நாட்டில் கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் S.B. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.