by Staff Writer 27-03-2022 | 4:23 PM
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியம்(IMF) வௌியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், பாராளுமன்றம் கூடுகின்ற எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.