புத்தளம் கடலில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

புத்தளம் கடலில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 26-03-2022 | 7:23 PM
Colombo (News 1st) புத்தளம் கடலில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். கடலில் குளிக்கச்சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நானு ஓயாவை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். இளைஞர்கள் மூவர் நேற்று (25) மாலை கடலில் குளித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் உடனடியாக பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டதுடன், இருவர் காணாமற்போயிருந்தனர்.