சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் அவதி

சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் அவதி

by Bella Dalima 26-03-2022 | 5:07 PM
Colombo (News 1st) சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் அவதிப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியால் சோமாலிய மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 4.3 மில்லியன் மக்கள் உணவு, தண்ணீர், இருப்பிடமின்றி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சோமாலியாவில் நிலையான அரசு அமையாதமை, தொடர்ந்து நடைபெறும் உள்நாட்டு சண்டைகள், மழையின்மை ஆகியன கடும் வறட்சிக்கு காரணமாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் கடும் வறட்சி காரணமாக சோமாலிய அரசு அவசர நிலையை அறிவித்தது. எனினும், 5 மாதங்கள் கடந்தும் அங்கு நிலைமை சீராகவில்லை. கடந்த சில வருடங்களில் மாத்திரம் சோமாலியாவில் இரண்டரை இலட்சம் பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.