English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
26 Mar, 2022 | 4:34 pm
Colombo (News 1st) யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கிடங்குகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ஜெட்டா மற்றும் ரியாத்திலுள்ள சவுதி அரேபியாவிற்கு உரித்தான Saudi Aramco நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
தாக்குதலுக்குள்ளான இரண்டு கிடங்குகளிலும் தீப்பற்றியதுடன், அப்பகுதி முழுவதும் கரும்புகை வௌியேறி வருகின்றது.
இந்த தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சு கண்டனம் வௌியிட்டுள்ளது.
இத்தகைய தாக்குதல்களால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் தடைகளுக்கு பொறுப்பேற்க முடியாது என சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும், தாக்குதல் குறித்து Saudi Aramco எண்ணெய் நிறுவனம் இதுவரை எவ்வித கருத்தையும் வௌியிடவில்லை.
10 Jul, 2022 | 08:34 PM
08 Jul, 2022 | 04:38 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS