மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் நிறுத்தம்

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் நிறுத்தம் 

by Bella Dalima 25-03-2022 | 4:00 PM
Colombo (News 1st) கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் இன்மையால், மின்னுற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான அன்ரூ நவமணி தெரிவித்தார். இதனால், தேசிய கட்டமைப்பிற்கான 270 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நீர் மின் உற்பத்தியிலிருந்து 17 வீதமும், அனல் மின்னுற்பத்தியிலிருந்து 77 வீத மின்னுற்பத்தியும் தேசிய கட்டமைப்பிற்கு தற்போது இணைக்கப்பட்டுள்ளது.