English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
25 Mar, 2022 | 4:24 pm
Colombo (News 1st) அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்காக மேலதிக எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் முன்கூட்டியே அறிவித்து பின்னர் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது தொடர்பில் தமது பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மேலும் 20,000 மெட்ரிக் தொன் டீசலை கப்பலில் இருந்து தரையிறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த டீசல் தொகையை ஏற்றிய கப்பல் சிங்கப்பூரில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
மேலும் 30,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
23 Jul, 2022 | 08:33 PM
16 Jul, 2022 | 04:19 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS