32Mn ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

32 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

by Staff Writer 24-03-2022 | 4:58 PM
Colombo (News 1st) 32 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளும் போதைவில்லைகளும் மத்திய தபால் பரிமாற்றகத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 8 பொதிகளை சோதனைக்குட்படுத்தியபோதே போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்களின் முகவரிகளுக்கு குறித்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும், முகவரிகள் போலியானவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 1590 கிலோகிராம் குஷ் எனப்படும் கஞ்சா மற்றும் 601 போதை வில்லைகள் குறித்த பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.