16 இந்திய மீனவர்கள் கைது

16 இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 24-03-2022 | 10:58 AM
Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 16 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்புகளில் நேற்றிரவு(23) மேற்கொள்ளப்பட்ட இரு வேறு ரோந்து நடவடிக்கைகளில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் நேற்றிரவு(23) கைது செய்து செய்யப்பட்டதுடன் குறித்த மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் படகுடன் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் நால்வரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(24) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார். இதேவேளை, கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் 12 இந்தியா மீனவர்கள் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.