யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையில் கணினி திருட்டு: மின்வெட்டின் போது கைவரிசை

by Staff Writer 24-03-2022 | 8:37 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் கணினி திருடப்பட்டுள்ளது அச்சுவேலி மத்திய கல்லூரியிலேயே இந்த திருட்டு நேற்று (23) இடம்பெற்றுள்ளது. பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று ஏற்பட்ட மின்வெட்டினை வாய்ப்பாக பயன்படுத்தி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை வளாகத்தினுள் மோப்ப நாய் மூலம் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.