by Staff Writer 24-03-2022 | 4:15 PM
Colombo (News 1st) தேர்தல், வாக்களிப்பு முறைமை, சட்ட ஒழுங்கு மறுசீரமைப்பு தொடர்பில் தேவையான திருத்தங்களை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்க பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதியுடன் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கான பதவிக்காலம் நிறைவடையவிருந்தது.
எவ்வாறாயினும், தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளதால், பதவிக்காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.