கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு

by Staff Writer 24-03-2022 | 8:18 AM
Colombo (News 1st) கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று(24) அதிகாலை பரவிய தீயினால் 4 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.