பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

by Bella Dalima 22-03-2022 | 7:22 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (22) நிறைவேற்றப்பட்டது. திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய, 51 மேலதிக வாக்குகளால் பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.