அரசாங்கத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கே இந்தியாவின் 1 பில்லியன் டொலர்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

by Bella Dalima 22-03-2022 | 8:56 PM
Colombo (News 1st) இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தும் ஆயத்தம் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். 14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, Home shop என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதற்காக 8 இலட்சம் ரூபாவை வழங்கி, பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு 2000 ரூபா கூப்பன் மூலம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமொன்று உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.