வானொலி அரச விருது வழங்கல் விழாவில் 6 விருதுகளை சுவீகரித்த சக்தி FM

by Staff Writer 21-03-2022 | 7:17 PM
Colombo (News 1st) வானொலி அரச விருது வழங்கல் விழாவில் சக்தி FM இம்முறை 06 விருதுகளை சுவீகரித்துள்ளது. சிறந்த ஆண் அறிவிப்பாளருக்கான விருது, சக்தி FM இசைக் கட்டுப்பாட்டாளர் சி.கே. மயூரன் வசமாகியது. சிறந்த காலை நேர நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு விருதையும் இசைக் கட்டுப்பாட்டாளர் சி.கே. மயூரன் சுவீகரித்தார். வணக்கம் தாயகம் நிகழ்ச்சிக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஆராய்ச்சிபூர்வ நிகழ்ச்சிக்காக வணக்கம் தாயகம் நிகழ்ச்சிக்கு ஊக்குவிப்பு விருது வழங்கப்பட்டதுடன், நிகழ்ச்சி அறிவிப்பாளர் பாக்கியராஜா கீர்த்தனன் இதனை பெற்றுக் கொண்டார். சிறந்த வானொலி இசை நிகழ்ச்சிக்கான விருதை அறிவிப்பாளரான சிவாஜிகணேசன் பிரேம்காந்த் தனதாக்கிக் கொண்டார். சிறந்த வானொலி நாடக தயாரிப்பாளருக்கான விருதை பிரணித்தா தமீன்தரன் பெற்றுக் கொண்டுள்ளதுடன், சிறந்த வானொலி நடிகைக்கான விருதை ஹர்சிகா சுந்தரலிங்கம் தனதாக்கிக் கொண்டார். வானொலி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் வாழ்த்துக்கள்.