by Staff Writer 19-03-2022 | 3:41 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை (20) இரவு முதல் மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சுத்திகரிப்பு செயற்பாடுகளுக்கு போதுமான மசகு எண்ணெய் இல்லாததால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிபபிட்டார்.
பல நிறுவனங்களில் மசகு எண்ணெய்க்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், அந்த மசகு எண்ணெய் கிடைக்கும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முற்பதிவு செய்யப்பட்ட மசகு எண்ணைய் கிடைத்தவுடன், சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவிலிருந்து வருகை தரும் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.