English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Mar, 2022 | 3:19 pm
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ள நீர் விநியோகம் இன்றிரவு 10 மணியளவில் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலேயில் இருந்து நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் நேற்றிரவு 07 மணியளவில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது.
நீர்குழாயை திருத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
இதற்காக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீர் விநியோகிக்கும் குறித்த பிரதான குழாயில், பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
எனினும், திருத்தப்பணிகளை மாலை 4 மணியளவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குழாய் திருத்தப்பட்டு மீண்டும் நீர் விநியோகிப்பதற்கு இரவு 10 மணியாகலாம் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
நீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, கொழும்பு – 05 மற்றும் 06, பத்தரமுல்லை, பெலவத்தை, உடுமுல்ல மற்றும் ஹிம்புட்டான பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு-04 இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுகின்றது.
23 Jul, 2022 | 02:21 PM
15 Jun, 2022 | 05:31 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS