இந்திய விஜயத்தை நிறைவு செய்து நிதி அமைச்சர் நாடு திரும்பினார் 

by Staff Writer 18-03-2022 | 3:38 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கான தனது 02 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (18) பிற்பகல் நாடு திரும்பினார். அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இந்தியாவுடனான 01 பில்லியன் டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார். நிதியமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகலவும் நிதியமைச்சருடன் இந்திய விஜயத்தில் கலந்துகொண்டிருந்தார்.