தெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

by Staff Writer 16-03-2022 | 7:51 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (16) தெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை (Railway Yard) பார்வையிட்டார். தெமட்டகொட ரயில் நிலைய பிரதான பொறியியலாளர் பிரிவு மற்றும் மாளிகாவத்தை ரயில்வே வேலைத்தளம் என்பவற்றை ஜனாதிபதி பார்வையிட்டார். அங்கு காணப்படும் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் ஊழியர்களிடம் அவர் கேட்டறிந்து கொண்டார். ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக பதவி உயர்வுகளை வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குவமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.