நாட்டு நிலைமை கவலையளிக்கிறது: அஸ்கிரிய அநுநாயக்க தேரர் தெரிவிப்பு

by Staff Writer 15-03-2022 | 8:38 PM
Colombo (News 1st) நாடு எதிர்கொண்டுள்ள நிலைமை தொடர்பில் கவலையடைவதாக அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் இன்று தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இன்று அஸ்கிரிய பீட அநுநாயக்கரை சந்திக்க சென்ற போது, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தேரர் கருத்து தெரிவித்தார்.
நாட்டு மக்களை அசௌகரியங்களுக்கு ஆளாக்க நாம் ஆசி வழங்கவில்லை. நாடு சிறந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே நாம் செயற்பட்டடோம். எனினும், இன்று ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கவலையடைகிறோம்
என தேரர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மல்வத்து பீடத்தின் மாகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் அநுநாயக்க தேரரையும் சந்தித்தார். இதன்போது, மக்கள் நன்மையடையும் வகையில் எதனையாவது செய்யுமாறும் அதிகாரிகளின் சுகபோகங்களை கைவிடுமாறு கூறுமாறும் மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் வலியுறுத்தினார்.