ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

by Staff Writer 15-03-2022 | 2:16 PM
Colombo (News 1st) மன்னார் - பேசாலையில் பெருந்தொகை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 02 கிலோ 775 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். பேசாலை பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.