வெவ்வேறு பகுதிகளில் விபத்து: 8 பேர் பலி

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் பலி

by Staff Writer 12-03-2022 | 3:48 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நெலுக்குளம், புளூமெண்டல், மீகொட, பியகம, பொல்பித்திகம, குருவிட்ட, மெல்சிறிபுர மற்றும் கும்புக்ஹெட்ட பகுதிகளிலேயே இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன. விபத்துகளில் சிக்கிய மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கவனயீனமாக வாகனம் செலுத்தியமையே விபத்துகளுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.